Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.எஸ்.பி.காதர் பாட்சாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செப்டம்பர் 05, 2019 02:23

கும்பகோணம்: சிலைக் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.காதர் பாட்சாவின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக அவரது தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் இடையே இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் கார சார வாதம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே வீடு கட்டும் போது மீட்கப்பட்ட சிலையை கடத்த உதவியதாக ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.காதர்பாட்சா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான பொன்.மாணிக்கவேல் காதர்பாட்சா ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது டி.எஸ்.பி.காதர் பாட்சா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பாக நடைபெற்ற வாதங்கள் அடங்கிய சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் அது தொடர்பான எழுத்துப் பூர்வமான ஆதாரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஜமீனை ரத்து செய்ய வாதம் செய்வதாகவும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிலையே இல்லை எனவும் காதர் பாட்சா தரப்பில் வாதிடப்ப்ட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாதவ ராமானுஜம் வரும் 9 ஆம் தேதி வழக்கின் உத்தரவிற்காக ஒத்தி வைத்தார்.

தலைப்புச்செய்திகள்